ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தீர்ப்புக்காக எதிர்க்கட்சித் தலைவர்களை வீட்டுக்காவலில் வைக்கவில்லை என ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் நாடகமாடிய நிலையில், தாங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளோம் என சமூகவலைத்தளங்களில் ஆதாரத்துடன் போட்டுடைத்துள்ளனர் எதிர்க்கட்சித் தலைவர்கள்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட் டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட் டதை எதிர்த்து தாக்கல் செய்யப் பட்ட மனுக்களை விசாரித்த 5 நீதி பதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு திங்க ளன்று தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பில் ஜம்மு -காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என்றும், வரும் 2024 செப்டம்பருக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கு வதற்கு முன்பாகவே போலீசார் தங்களை வீட்டுக்காவலில் சிறை பிடித்து வைத்துள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி னர். ஆனால் ஜம்மு -காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட வில்லை, அவர்களை கைது செய்ய வில்லை என கூறினார். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய மாநாட்டு கட்சி, ஜம்மு -காஷ் மீர் மக்கள் ஜனநாயக கட்சி உள் ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலை வர்களின் வீட்டிற்கு சங்கிலியுடன் பூட்டுப் போட்டு, கவச வாகனங் களை வெளியே நிறுத்தி ஜம்மு - காஷ்மீர் அதிரடிப்படை போலீசார் தலைவர்களை வீட்டை வீடு வெளியே விடாமல் காவலில் வைத்துள்ளனர்.
தாங்கள் வீட்டுக் காவலில் வைக் கப்பட்டதை எதிர்க்கட்சித் தலை வர்கள் சமூக வலைத்தளங்களில் புகைப்பட ஆதாரத்துடன் வெளி யிட்டு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் நாடகத்தை போட்டுடைத்துள்ளனர்.
யூசுப் தாரிகாமி வீட்டில் கவச வாகனம்
ஜம்மு- காஷ்மீர் முன்னாள் எம்எல்ஏவும் (குல்ஹாம்), மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத் திய குழு உறுப்பினருமான யூசுப் தாரிகாமி தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்,”எனது குடியிருப்பை விட்டு வெளியே செல்ல எனக்கு அனுமதி இல்லை. ஊடக வருகை தடைசெய்யப்பட்டுள்ளது. என் வீட்டு வாசலுக்கு வெளியே ஒரு கவச வாகனம் நிற்கிறது” என புகைப்படத்துடன் தகவல் தெரிவித் துள்ளார்.
வீட்டு வாசலில் போடப்பட்டுள்ள சங்கிலி யாருடையது?
முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் துணை தலைவருமான உமர் அப்துல்லா தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் கூறுகையில்,”அன்புள்ள துணை நிலை ஆளுநர் அவர்களே, எனது வீட்டு வாசலில் போடப்பட்டுள்ள இந்த சங்கிலிகள் என்னால் போடப் படவில்லை. உங்கள் காவல்துறை செய்ததை நீங்கள் ஏன் மறுக்கி றீர்கள். உங்கள் காவல்துறை என்ன செய்கிறது என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கவும் வாய்ப்புள் ளது? நீங்கள் நேர்மையற்றவராக இருக்கிறீர்களா அல்லது உங்கள் காவல்துறை உங்களைச் சார்ந்து செயல்படுகிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதே போல ஸ்ரீநகரின் குப்கரில் உள்ள தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவின் வீட்டுக்கு அருகில் பத்திரிகையாளர்களைக் கூட போலீசார் அனுமதிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மெஹபூபா முப்தி
ஜம்மு- காஷ்மீர் மக்கள் ஜன நாயக கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாவ தற்கு முன்பாக போலீசார் அவரது வீட்டுக்கு சீல் வைத்து, அவரை சட்டவிரோத வீட்டுக்காவலில் வைத்துள்ளனர் என ஜம்மு -காஷ் மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் எக்ஸ் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.